Our Feeds


Friday, June 27, 2025

Sri Lanka

கொள்கலன் நெரிசல் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்!


கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள, கொள்கலன் தாங்கி நெரிசல் எதிர்வரும் நாட்களில் முடிவுக்கொண்டுவரப்படும் என சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் நேற்று தெரிவித்தது. 

இந்திலையில், கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட இது குறித்து விளக்கமளித்திருந்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கொள்கலன்களை குறுகிய காலத்திற்குள் விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, அடுத்த சில நாட்களில் இந்த நெரிசல் முடிவுக்கு வரும் எனவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »