Our Feeds


Tuesday, June 17, 2025

Sri Lanka

தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பாராளுமன்றத்தை புறக்கணித்துள்ளது எதிர்க்கட்சி!




கொழும்பு மாநகர சபையின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தைப் புறக்கணித்ததாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுகளில் ஊக்கமருந்து தடுப்பு வரைவு மசோதாவின் விதிமுறைகள் மீதான விவாதத்தின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி ஆணையாளர் உட்பட அனைத்து அரசு எந்திரங்களையும் பாதுகாப்பேன் என்று கூறிய பிரதி அமைச்சர், உள்ளூராட்சிச் சபை சட்டத்தின்படி உள்ளூராட்சிச் சபை ஆணையாளர் சட்டப்பூர்வமாகச் செயல்பட்டார் என்றும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »