புனித ரமழான் மாத நோன்பு உலகம் முழுவதும் நோற்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று ரமழான் மாத முதலாவது வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்காக பாலஸ்தீனத்தின் புனித மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு சென்ற பாலஸ்தீன முஸ்லிம்களை ஜூம்ஆவுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி அநியாயம் செய்தது இஸ்ரேல்.
காஸாவில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பாரிய யுத்தத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவிகளை கொன்று குவித்த இஸ்ரேல் மேற்க்குக் கரை பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் புனித ரமழான் மாதத்தில் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு செல்ல விடாமல் தடுத்து அநியாயத்தில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம்.
