Our Feeds


Thursday, February 5, 2026

SHAHNI RAMEES

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய கணக்காய்வாளர் நாயகம்



இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 


தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். 


இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 


சமுதிகா ஜயரத்ன, வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவராவார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »