Our Feeds


Sunday, March 29, 2026

SHAHNI RAMEES

ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி!


பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ்

நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்த உடன்படிக்கையின் கீழ், தினசரி இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் வீதம் இந்த கடல் வழிப்பாதையின் ஊடாகப் பயணிக்கும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.


"இது ஈரானால் எடுக்கப்பட்ட மிகவும் சாதகமான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய ஒரு நடவடிக்கையாகும், இது பாராட்டப்பட வேண்டும்... இது அமைதிக்கான ஒரு முன்னோடியாகும் மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவும்" என இஷாக் தார் அங்கு குறிப்பிட்டுள்ளார்.


தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளைத் தணிப்பதற்கான ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாகவும், அமைதிக்கான முயற்சிகளை வலுப்படுத்த இது வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »