170 வரையான தொகுதிகளை கைப்பற்றி திமுக
கூட்டணி ஆட்சியமைக்கும் - தமிழக தேர்தல் நிலை தொடர்பில் தமீமுன் அன்சாரி தகவல்.தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற கணிப்பை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளன.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மற்றும் தற்போதைய நிலை தொடர்பில் தமிழக முஸ்லிம்களின் வரவேற்பை பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களிடம் ShortNews கேட்டபோது, 140 முதல் 170 வரையான தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
