கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இன்று (02) தெரிவித்தார்.
வெப்பமான வானிலையுடன் நீரின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் நீர் நுகர்வு அதிகரிப்பு காரணமாக, குடிநீர் உற்பத்தியை எதிர்காலத்தில் ஓரளவு கட்டுப்படுத்த நேரிடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வெப்பமான வானிலையுடன் நீரின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் நீர் நுகர்வு அதிகரிப்பு காரணமாக, குடிநீர் உற்பத்தியை எதிர்காலத்தில் ஓரளவு கட்டுப்படுத்த நேரிடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
