இந்திய கடற்படையின் 'நட்புறவுப் பாலங்களை' உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் ஐஎன்எஸ் சுனைனா எனப்படும் 'ஐஓஎஸ் சாகர்' (IOS Sagar) கப்பல் நாளை (15) கொழும்பை வந்தடையவுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.
கடற்படை நடவடிக்கைகள், தகவல் தொடர்பு நடைமுறைகள், கடலில் உயிர் பாதுகாப்பு, தீயணைப்பு, சேதத் தடுப்பு, தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகள் (VBSS) மற்றும் மேம்பட்ட கப்பல் கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் போன்ற பல விசேட பிரிவுகள் இப்பயிற்சியில் உள்வாங்கப்பட்டுள்ளன.
