Our Feeds


Saturday, May 2, 2026

Zameera

நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வி : சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க அழைப்பு – சுரேன் ராகவன்


 (எம்.ஆர்.எம்.வசீம்)


அரசாங்கத்தின் 18 மாத ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. அதனால்  சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க அனைவரும் ஒன்றுதிறளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.


சிறிலங்கா சுதந்திர கட்சியி்ன் மேதின கூட்டம் வெள்ளிக்கிழமை (1) பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கழிந்தும் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற தவறி இருக்கிறது. மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைத்தே 159 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுத்தார்கள்.  அதனால் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிியை நிறைவேற்ற முடியாது என்றால் ஆட்சியை கைவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு அநுரகுமாரவுக்கும் ஹரினிக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆனால் வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய எதுவும் இதுவரை நாட்டுக்கு வரவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண மாகாணசபை தேர்தலை இன்னும் ஏன் நடத்தாமல் இருக்கிறீர்கள். தேர்தலை நடத்தினால் அநுரகுமாரவுக்கும் ஹரினிக்கும்  வீட்டுக்கு செல்லவேண்டிவரும். அதனலே தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்.


மேலும் 18 மாத ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. அதனால்  சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் அனைவரும் ஒன்றுதிறளுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »