Our Feeds


Friday, June 19, 2026

Zameera

செம்மணி புதைகுழியில் மேலும் 3 என்புக்கூடுகள் அகழ்வு; புதிதாக 7 என்புக்கூடுகள் அடையாளம்




 செம்மணி மனித புதைகுழியில் இருந்து 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 29ஆம் நாள் அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.


அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 394 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 370என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


வெள்ளிக்கிழமை (19) நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினரும் புதைகுழி  அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »