Our Feeds


Tuesday, June 16, 2026

Zameera

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமூக நீதிக் கட்சி, சமூக அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டம் இன்று (16) நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சமூக நீதிக்கான அமைப்பின் தலைவர் அர்க்கம் முனீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »