Our Feeds


Tuesday, July 7, 2026

Zameera

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சீனி கைப்பற்றல்: 4 பேர் கைது


 பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, மனித நுகர்வுக்குத் தகுதியற்ற இந்தச் சீனித் தொகையுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000 சீனி மூட்டைகளை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவெல, அங்கொட, பிலியந்தலை மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »