Our Feeds


Friday, July 10, 2026

SHAHNI RAMEES

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

 

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றத் தவறியமைக்காக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று தீர்மானித்தது.

 

அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று (10) பாராளுமன்றத்தில் வைத்து குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »