Our Feeds


Thursday, August 27, 2026

ShortNews

நீதித்துறை, பொருளாதாரம் பற்றி பேச ராஜபக்ஷர்களுக்கு உரிமை இல்லை - மஹிந்த ஜயசிங்க!


அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மஹரகம பகுதியில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள். இந்த திருத்தம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சாதகமானதே தவிர, பாதகமானதல்ல.

எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்கள், பலர் பிணையில் உள்ளார்கள். கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்படுகின்றபோது இவர்கள் கலக்கமடைந்துள்ளார்கள். ஊழல்வாதிகள் சிறைக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர மக்களின் பிரச்சினையல்ல.

அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்ஷர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.

இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்ஷர்களின் காலத்தில்தான் இல்லாமல் போனது. முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் முறையற்ற வகையில் பதவி நீக்கினார்கள். அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »