முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்
முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார சற்று முன்னர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் இன்று (12) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
