நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதுமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அனுபவமிக்க மற்றும் அறிவுள்ள நீதிபதிகளின் சேவைகளை மேலும் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி அரசாங்கம் அவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் தற்போதைய சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு அமைச்சரவை எடுத்துள்ள முடிவு தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCSL) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதோடு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வைப் பேண வேண்டிய அவசியத்தையும் அவ்அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது.
Thursday, August 20, 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு முன்னர் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கவும்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
