பயங்கரவாதத்திற்கு நமது நாட்டில் இடமில்லை. மேலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் கட்டளை சட்டம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளேன்.
இதுபோன்ற வளமான நாட்டில் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
எனவே, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். ஆகவே நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பிரேமதாசவின் மகன் என்ற வகையில் நான் அனுமதி வழங்க போவதில்லை´ என அக்குரணையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
