பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழு தெரிவித்துள்ள அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களில் 2 சதவீதமானவர்கள் அடிப்படைவாத கருத்துக்களில் தீவிரமாக இருப்பதாகவும் இந்த நிலை எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைவாத கருத்துக்களினால் கவரப்பட்டுள்ளவர்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் பாதுகாப்பு அமைச்சு சார்பில் அதற்காக உளவியலாளர்களை ஒருங்கிணைத்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழு மேலும் தெரிவித்துள்ளது.
