Our Feeds


Wednesday, February 19, 2020

www.shortnews.lk

பாடசாலையையும், பெற்றொரையும் இணைக்கும் புதுவகை கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ள காத்தான்குடி இளைஞர்

 





காத்தான்குடியில் வசிக்கும் மஸ்லின் என்ற இளைஞர் பாடசாலையையும் பெற்றோர்களையும் இணைக்கும் APPLICATION ஒன்றையும் அதனுடன் இணைந்து வேலை செய்யும் ஒரு கருவியையும் உருவாக்கியுள்ளார்.

உங்களுடைய பிள்ளைகள்  காலையில் பாடசாலைக்கு சரியான நேரத்திற்கு சென்றுவிட்டார்களா இல்லையா என்பதையும், பாடசாலை விட்டதும் பாடசாலையில் இருந்து வெளியேறிவிட்டனரா என்பதையும் அவர்களுக்கு  கொடுக்கப்பட்டுள்ள ID CARD  இணை அவர்களின் வகுப்பறைக்கு வெளியில் பொருத்தப்பட்டுள்ள ID CARD READER இல் வைத்தவுடன் பெற்றோர்களின் தொலைபேசியில் காணப்படும் மென்பெருலினூடாக உங்களுக்கு நோட்டிபிகேஷன் (NOTIFICATION) மூலமாக தெரிவிக்கப்படும் அதாவது சிறிய ALERT வடிவில் வந்து சேரும் இதன் மூலமாக பிள்ளைகள் வீட்டில் இல்லாது பாடசாலையில் உள்ள நேரத்திலும் பிள்ளைகளை பெற்றோரால் அவதானிக்க முடியும்.

ஆசிரியர்களுக்கு வழங்கக்கப்படும் ID CARD ஐ ID CARD READER இல் வைத்தவுடன் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரும் நேரம், அவர்கள் பகுதி நேர வேளையில் சோர்ட் லீவ் (SHORT LEAVE) இல் செல்லுதல், லீவு எடுத்தல் போன்ற அனைத்தையும் பெற்றோர்கள் உடனுக்குடன் நோட்டிபிகேஷன் (NOTIFICATION) மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐடி கார்ட் (ID CARD)  ஐ ஐடி கார்ட் ரீடர் (ID CARD READER) இல் வைத்ததும் அவர்களுக்கு பாடசாலையால் வழங்கப்படும் பாட நேர அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் உரிய நேரத்திற்கு வகுப்பறைக்குச்  சென்று பாடம் நடத்துகிறார்களா என்பதை அறிய முடியும் அதாவது பெற்றோர்களின் தொலைபேசியில் காணப்படும் மென்பொருளில் சப்ஜெக்ட் டைம் டேபிள் (SUBJECT TIMETABLE) என குறிப்பிடப்பட்டுள்ள பட்டன் (BUTTON ) ஐ கிளிக் (CLICK) செய்வதன் மூலம் ஆசிரியர்கள் பாடத்திற்கு செல்லும் போது பச்சை நிறத்திலும் செல்லாத போது சிவப்பு நிறத்திலும் அடையாளம் காட்டப்படும். இதன் மூலம் வீட்டிலுருந்தவாறே பெற்றோர் அவர்களின் பிள்ளைக்களின் வகுப்பு ஆசிரியர்களின் நடவெடிக்கையை அவதானிக்க முடியும்.

பாடசாலையில் நடாத்தப்படும் அணைத்து தவணை பரீட்சைகள் மற்றும் ஏனைய பரீட்ச்சைகள், இணைபாடவிதான செயற்பாடுகள் போன்ற அணைத்து கற்றல் சம்மந்தமான போட்டிகளிலும் உங்கள் பிள்ளைகள் பெரும் புள்ளிகளை மாணவர்கள் வீட்டுக்கு வந்து கூறும் முன்பே அறிந்து கொள்ள முடியும்.

பாடசாலையில் நடைபெறவிருக்கும் அணைத்து விதமான நிகழ்வுகள் உதாரணமாக பெற்றோர் சந்திப்பு (parents meeting), அபிவிருத்தி சங்க நிகழ்வு (Development Association meeting), ஆசிரியர்களுக்கான நிகழ்வு (Teachers meeting),பரிசளிப்பு விழா (Prize Giving Ceremony), மற்றும் ஆசிரியர் தின விழா(Teachers Day ), சிறுவர் தின விழா (Children's Day) என பாடசாலையால் ஒழுங்கு செய்து நடாத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான நேரம், இடம் என்பன இவ் மென் பொருளின் (Software) மூலம் அறிய முடியும். அது மற்றும் இன்றி இந்நிகவுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காத பெறோர்கள் அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வீட்டிலிருந்தவாரே நேரடி ஒளிபரப்பாக (Live Telecast) ஆக பார்க்க முடியும்.

இவ் மென்பொருளை (Software) பெற்றோர்கள் பயன்படுத்துவதன் மூலம் தூர இடங்களுக்கு பேருந்து (BUS) மூலம் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் இவ் பேருந்து GPS இன் மூலம் நேரடியாக எங்கு இருக்கின்றது என்ன வேகத்தில் செல்கின்றது என்பது வரை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும் அது மற்றும் இன்றி அந்த பேருந்தின் டிரைவர் அந்த பேருந்தை 60KM வேகத்திற்கு மேல் செலுத்தினால் உடனடியாக பெற்றோர்களுக்கு இவ் மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம்  தெரியப்படும்.  

இந்த மென்பொருளானது  பெறோர்கள் வீட்டுலுருந்தவாறே தங்களது பிள்ளைகளை அவதானிக்கவும் பாடசாலைக்கு சென்ற நாட்களை அறிந்து கொள்ளவும் , ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்களா என்பதையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் உங்களது பிள்ளைகள்  கல்வி கற்பதில் எந்த நிலையில் உள்ளனர் என்பதையும் பாடசாலையால் நடாத்தப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கலந்து கொள்கிறாரா என்பதையும் பாடசாலை வாகனங்கள் பாதுகாப்பான முறையில் பிள்ளைகளை பாடசாலையில் கொண்டு சேர்கின்றதா என்பதையும் அறிய முடியும்.

நாம் எமது குழந்தைகளை வீட்டிலிருந்து அவர்களது செயற்பாடுகளை அவதானிப்பது போல் பாடசாலைக்கு செல்லும் போதும் அவர்களது செயற்பாடுகளையும் அவதானிக்க முடியும் இதன் மூலம் மாணவர்கள் வழிதவறிச் செல்வது தடுக்கப்படுவதுடன் அவர்களது எதிர்காலமும் சிறப்பாக அமைய வழியாக அமையும் இது பெற்றோருக்கு உளத்திருப்தியை ஏற்படுத்தும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

மேலும், பிள்ளைகளை பெற்றோர் அவதானிப்பது போல் இம் மென்பொருளின் உதவியால் ஆசிரியர்களை கல்வி அமைச்சரால் கூட அவதானிக்க முடியும் இதனால் ஆசிரியர்களும்  ஒழுங்கான முறையில் தமது கடமையை செய்வார்கள். 

இவ் மென்பொருள் கையடக்க தொலைபேசி (Smart Phone) & கணிணிக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது..

இம் மென்பொருள் தொடர்பில் ஆர்வம் உள்ள பாடசாலை அதிபர்கள் & முதலீட்டாளர்கள் கீழே உள்ள தகவலை பயன்படுத்தி இக்கண்டு பிடிப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

MMM.Maslin 
+94758666866
https://www.facebook.com/maslin.roshan

குறிப்பு :- இந்த படைப்புக்கான காப்புரிமை (Patent Right ) & படைப்புரிமையை (Creative Right) உரிய நபர் பெற்று இருக்கிறார் இதனை அரச, தனியார் நிறுவங்கள் குறித்த இளைஞரின் அனுமதி இன்றி தனிப்படட முறையில் பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »