சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்கி அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு விரைவில் மீளப்பெறப்படும் என சற்று முன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பதில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பிரதேசங்களில் இந்தப் பிரச்சினை இருப்பதால் சாய்ந்தமருதுக்கு மாத்திரம் தனியான கவனம் செலுத்தாமல் மற்ற விடயங்களையும் சேர்த்து ஒரு தீர்வை அரசு வழங்க தீர்மானித்துள்ளது என இதன் போது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
