தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் 20.02.2020ம் திகதி பாராளுமன்றத்தில் குழுவின் தலைவர் மலிக் ஜயதிலகவினால் சமர்பிக்கப்பட்டது.
அதில் வக்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்.
அனைத்து பள்ளிவாயல்களிலும் நிகழ்த்தப்படும் அனைத்து உரைகளும் ஒலிப்பதிவு செய்யப்பட வேண்டும்.
முஸ்லிம் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாயல்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட வேண்டும்.
இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவுகளை இடை நிறுத்த வேண்டும்.
இலங்கை அடையாள இலக்கம் கொண்ட பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வெளியிட வேண்டும்.
சகல மதங்களையும் உள்ளடக்கிய சர்வ மத அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்
