மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமையப் பெற்றுள்ள பள்ளிவாயலை கடந்த பெப்ரவரி 05ம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் தமக்குறிய ஓய்வு அறையாக மாற்றி அதில் சிலையொன்றையும் வைத்து வழிபாடு நடத்தியமை பெரும் சர்சையை உண்டாக்கிய.
இந்நிலையில் குறித்த பள்ளி தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் நீதி சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிரிபாலடி சில்வாவுடன் கலந்துரையாடி பள்ளியை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த பள்ளியை மீண்டும் முஸ்லிம்களின் தொழுகைக்காக வழங்குமாறு அமைச்சர் நிமல் சிரிபால டீ சில்வா சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
