Our Feeds


Sunday, May 17, 2020

www.shortnews.lk

மழையுடனான வானிலை தன்மையில் அதிகரிப்பு

 

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, இன்றைய தினம் மழையுடனான வானிலை தன்மை குறைவடைந்துள்ள போதும், நாளைய தினம் மழையுடனான வானிலை தன்மையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என காலநிலை அவதான எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கமானது இன்று சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளிக்கு அம்பான் என பெயரிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »