நேற்று (22) இலங்கையில் 2,909 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 556 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் ஊடாகவே குறித்த செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியாக நேற்று பதிவான கொரோனா நோயாளர்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
