இலங்கையிலுள்ள சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு, எரிசக்தி
அமைச்சு, இலங்கைக்கான சீன தூதரகம் மற்றும் ரஜரட்ட பலக்லைக்கழக
இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சைபர்
தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களில் இரண்டு இணையத்தளங்களை வழமைக்கு
கொண்டுவந்துள்ளதாகவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
