(செ. தேன்மொழி)
கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிக்கு புறம்பாக இயங்கிய கல்வி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில் 50 மாணவ , மாணவிகளை தங்கவைத்து வகுப்புகளை நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் வகுப்புகளை நடத்திய குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாக குழுவைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
