Our Feeds


Friday, June 4, 2021

www.shortnews.lk

அத்தியவசிய சேவைகள் அனைத்தும் முழுமையாக எப்போது ஆரம்பிக்கப்படும்? - அமைச்சர் பதில்

 



(இராஜதுரை ஹஷான்)


ஜுன் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மீள ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது. ஒரு தரப்பினரது பொறுப்பற்ற செயற்பாடுகளினால் தற்போதைய நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது என தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொது மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய இம்மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »