மிக வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு தொற்றுடையவர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாட்டில் கொவிட் பரவல் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்தார். இந்த திரிபு பரவலையடுத்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அல்லது கொவிட் தடுப்பூசியின் ஒரு செலுத்துகையை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் இதனால் அச்சுறுத்தல் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் இன்றுவரை கொவிட் பரவல் ஆபத்து குறைவடையவில்லை என்பதால் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.