Our Feeds


Saturday, August 28, 2021

www.shortnews.lk

BREAKING: கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் பந்துல நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி பிரதமருடன் நெருங்கிப் பழகினாரா? - PHOTOS

 



கொரோனா தொற்றுக்குள்ளான வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்திருந்தார்.




அத்தோடு, தன்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்படி, நேற்றைய தினம் (27) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றிருந்தார்.

ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், இராணுவத்தளபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் இந்த செயலணிக் கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர். எனவே இவர்கள் அனைவரும் அமைச்சர் பந்துலவுடன் நெருங்கிப் பழகிய முதல்நிலை தொடர்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என தமிழன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »