தற்போதைய நிலைமையில் பொருட்களின் விலை அதிகரிப்பை தடுக்க முடியாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (29) அமைச்சரவை கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், மக்கள் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்குவதற்கும் இடமளிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தையில் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.