தனியார் விமானமொன்று, கட்டுநாயக்கவின் கிம்புலபிட்டியவில் இன்று பிற்பகல் அவசரமாக தரையிறங்கியது. இதனால், நால்வர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கைக்குகாக மீட்புக் குழுவொன்றை சம்பவ இடத்துக்கு இலங்கை விமானப்படை அனுப்பியதாக விமானப் படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேற்படி விமானத்திலிருந்த நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செஸ்னா 172 ரக விமானமொன்றே இவ்வாறு அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.