Our Feeds


Tuesday, June 21, 2022

SHAHNI RAMEES

இஸ்லாமிய புத்தகங்கள், குர்ஆன்கள் தொடர்பிலான இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு எதிராக முறைப்பாடு!

 

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அர்ஷார்ட் நிஸாம்தீன் இன்று (21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் குர்ஆன்கள்  தொடர்பில் கட்டுப்பாடுகள் கொண்ட விதிமுறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் இலங்கையில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்துக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டவை என்று நிசாம்தீன் தனது முறைப்பாட்டில் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும் இந்த விவகாரம் அரசியலமைப்புச் சட்டத்தின் 12 மற்றும் 14 வது பிரிவுகளில் உத்தரவாதமளிக்கப்பட்ட  அடிப்படை உரிமைகளை வெளிப்படையாக  மீறுவதாகும். சிறுபான்மை சமூகத்தினருக்கு மாத்திரம் விதிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »