Our Feeds


Tuesday, June 21, 2022

SHAHNI RAMEES

சமூகவலைதள செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார விடுதலை..!

 

சமூக வலைதளங்களில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற சந்தேகத்தில் கைதான செய்யப்பட்ட  அனுருத்த பண்டாரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான்  இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் தரப்பினரும் பிரதிவாதியும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிவான், அனுருத்த பண்டாரவை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்
சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், குற்றச்சாட்டை தொடர முடியாது என முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அனுருத்த பண்டார பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் முன்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »