Our Feeds


Friday, July 22, 2022

SHAHNI RAMEES

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரால் அதிகாலையில் கலைப்பு: 9 பேர் கைது..!



ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில்,

  கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரரகளின் கூடாரங்கள் இன்று அதிகாலை பாதுகாப்பு தரப்பினரால் அகற்றப்பட்டதுடன் ஆர்ப


இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்த பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர், அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு வலியுறுத்தினர்.


பாதுகாப்புப் படையினருடன் மோதினால் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் எச்சரித்தனர்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றுவதற்கு படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்,


ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்கு பாதுகாப்புபுப் படையினர் முற்பட்டபோது, பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


இதன்போது சிலர் காயமடைந்துள்ளனர், ஊடகவியலளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்,


இச்சம்பவத்தின் போது  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கலைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »