Our Feeds


Friday, July 22, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு




ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற

குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்க்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


மேலும், இந்நடவடிக்கைக்காக கைரேகை அடையாளப் பிரிவினரின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுளு்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »