Our Feeds


Thursday, July 21, 2022

SHAHNI RAMEES

என்மீது உடனடியாக விசாரணைகளை ஆரம்பியுங்கள்..! - முன்னாள் அமைச்சர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

 

ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் இலஞ்சம் பெற முயற்சித்ததாகக் தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

ஜப்பானிய நிறுவனத்திடம் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஜூலை 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதன் பின்னணியில், இது தொடர்பான தகவல்கள் பல சமூக ஊடகங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »