Our Feeds


Friday, August 19, 2022

SHAHNI RAMEES

நாளை கொழும்பில் 10 மணித்தியால நீர்வெட்டு.!

 

கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் நாளை (20) இரவு 11 மணி முதல் மறுநாள் காலை (21) காலை 9 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக அப்பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு 04 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »