Our Feeds


Tuesday, September 6, 2022

ShortNews Admin

மழை இன்று குறைவடையும் சாத்தியம் - சில இடங்களில் 50 மி.மீற்றக்கு அதிக மழை



நிலவிய கடும் மழையுடனான வானிலை இன்று (06) சற்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.  சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம்  கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து நாளை (7) வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (6) பெந்தோட்டை (களுத்துறை மாவட்டம்), பொத்துபிட்டிய (இரத்தினபுரி மாவட்டம்), மற்றும் போதாகம (மொனராகலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »