Our Feeds


Thursday, September 1, 2022

ShortTalk

VIDEO: தமிழீழ விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எண்ணை தாங்கி மீட்பு!



முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது.


காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜாவின் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த பகுதி கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது பாரிய இரும்பு எரிபொருள் தாங்கி ஒன்று எரிபொருட்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

16.3 அடிநீளமும், 7.9அடி விட்டமும் கொண்ட எரிபொருள் தாங்கியே மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட எரிபொருள் தாங்கியை புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் கொண்டு சென்று பாதுகாக்குமாறும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் பணித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »