Our Feeds


Wednesday, September 7, 2022

SHAHNI RAMEES

#VIDEO: காலாவதியாகும் பைசர் தடுப்பூசிகள்

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகளின் கையிருப்பு

ஒக்டோபர் மாத இறுதிக்குள் காலாவதியாகும் என சபை முதல்வரும் கல்வியமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

ஆபத்து அதிகரிக்கும் முன் இந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் தீவிரத் தன்மையை வெளிப்படுத்தி, தடுப்பூசிகளின் அவசியத்தை வலியுறுத்தி சுகாதார அமைச்சு மக்களுக்கு ஆர்வத்தை காட்டும் நடவடிக்கையில் மேலும் அவதானம் செலுத்த வேண்டுமென்பதை ஒப்புக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »