திருகோணமலை-தோப்பூர் பகுதியில் இன்று (26) உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் உழவு இயந்திரத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அதற்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த அமீர் அலி அசாத் (17வயது) எனவும் தெரிய வருகின்றது.
இளைஞனின் சடலம் தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(அப்துல்சலாம் யாசீம்)