Our Feeds


Thursday, October 19, 2023

ShortNews

காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள 20 லட்சம் மக்களுக்கு வெறும் 20 லொரிகளின் மட்டும் உதவிகள் வழங்க அனுமதி!



காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வாயில் ஒன்றை  திறப்பதாக எகிப்து அறிவித்துள்ளது.


அதன்படி மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் 20 லாரிகளை காஸா பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.


காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனால் காஸா மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அவசரமாக தேவைப்படுவதாக எகிப்து தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »