Our Feeds


Sunday, December 31, 2023

News Editor

3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமான அறிவிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து 250மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதனையடுத்து, அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பிரசன்னமாகவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »