Our Feeds


Sunday, December 31, 2023

News Editor

சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நிலையத்தில் வெடிப்பு – மூவர் படுகாயம்


 வீடு ஒன்றில் இயங்கிவந்த சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் நிலைய உரிமையாளர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

 

பிலியந்தலை மாவித்தபுரவில் இன்று (31) காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தளபாடங்கள், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இந்த வீட்டில் பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளுக்குத் தேவையான ஏனைய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

 

இன்று (31) காலை 7 மணியளவில் பட்டாசுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுத்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »