Our Feeds


Thursday, January 4, 2024

News Editor

சட்டவிரோதமான முறையில் அலைபேசிகள் இறக்குமதி


 சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 அலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் (03) கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு  அலைபேசிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட அலைபேசிகள், சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற இருவர் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வேன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 டி.கே.ஜி கபில

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »