Our Feeds


Monday, May 20, 2024

ShortNews Admin

கொழும்பில் கடும் வாகன நெரிசல் !

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனி தெரு, மருதானை, புரஹல, ராஜகிரிய, பத்தரமுல்லை, நுகேகொடை, கிருலப்பனை, பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.



பேஸ்லைன் வீதியின் போக்குவரத்து நெரிசலுடன் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் பேலியகொட வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.



கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



வாகனம் ஓட்டும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »