Our Feeds


Sunday, February 8, 2026

SHAHNI RAMEES

கால்வாயில் கிடந்த சடலம்; மத்துகமவில் பரபரப்பு!



மத்துகம - அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில்,

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர் இத்தேபன, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலம் நாகொட வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »