Our Feeds


Sunday, April 26, 2026

Zameera

வாகன இறக்குமதி செலவு 2025 இல் மூன்றாவது உச்ச நிலையை அடைவு

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி அளவில் தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருந்தன. நீண்டகால கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய கேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தினால் வரி மற்றும் வரி அல்லாத பல கொள்கை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இது பல ஆண்டுகளாக நிலவிய கட்டுப்பாடுகளால் தேங்கியிருந்த கேள்வி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக 2025 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இறக்குமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டதுடன், தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன இறக்குமதி செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டில் பதிவான 2.12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டில் பதிவான 2.09 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குப் பிறகு பதிவான மூன்றாவது மிக உயர்ந்த வருடாந்த வாகன இறக்குமதி செலவாகக் கருதப்படுகிறது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »