Our Feeds


Sunday, August 16, 2026

Zameera

2029ஆம் ஆண்டிலும் அனுர குமார திசாநாயக்கவே ஜனாதிபதி...

தற்போதைய அரசாங்கம் ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கணித்த எதிர்க்கட்சிக் குழுக்கள், இப்போது 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன தெரிவித்துள்ளார்.



ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அன்று திசைகாட்டி (மாலிமாவ) அரசாங்கத்திற்கு அனுபவம் இல்லை எனக் கூறிப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்த போதிலும், இன்று அந்த அனைத்து வாதங்களும் முறியடிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.



“ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாங்கத்தைக் கவிழ்க்கக் காத்திருந்தவர்கள், இப்போது 2029 ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிக் கனவு காண்கிறார்கள். ஒரு புதரை மிதித்தால் கூட இப்போது 2029 ஜனாதிபதி வேட்பாளர்கள் உருவாகிறார்கள். அவர்கள் இப்போது பதவிப்பிரமாணம் செய்வது மட்டுமே பாக்கி என்பது போல் நடந்துகொள்கிறார்கள்,” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.



அரசாங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், 2024 தேர்தலில் சந்தேகத்துடனோ அல்லது பயத்துடனோ திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் கூட இப்போது அரசாங்கத்தைச் சுற்றி திரண்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.


குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் காரணமாக, அப்பகுதிகளிலும் அரசாங்கத்திற்குப் பெரும் ஆதரவு கிடைத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.



நாட்டின் அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் மக்கள் ஆதரவு அரசாங்கமாக திசைகாட்டி முன்னோக்கிச் செல்வதாகவும், அதற்கேற்ப 2029 ஆம் ஆண்டிலும் அனுர குமார திசாநாயக்க நிச்சயமாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் சுசந்த குமார நவரத்ன மேலும் வலியுறுத்தினார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »