அரசாங்க தரப்பிற்குள் இன்னமும் ஊழல் தலைதூக்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. நாடாளுமன்றில் தெரிவித்தார்.
1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும், அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் தரம் குறைவாக இருப்பதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போராட்டக்காரர்களைக் கையாளும் சூழலில் ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.